குன்னூரில் வெலிங்டன் ராணுவ இசைக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசு பெற்ற வெலிங்டன் ராணுவ இசைக் குழுவினருக்கு குன்னூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



நீலகிரி: டெல்லியிலிருந்து திரும்பிய வெலிங்டன் ராணுவ இசைக் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் நூற்றாண்டு பழமை மிக்கது. இந்த ராணுவ மையம் நாட்டிலே மிகவும் முக்கியமான ராணுவ மையமாகத் திகழ்ந்து வருகிறது. முப்படை ராணுவ பயிற்சி கல்லூரியும் இங்கு உள்ளது.

இந்த நிலையில் ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு ராணுவ பிரிகளின் சார்பாக பேண்ட் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் நடைபெற்றது.



இதில் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள மெட்ராஸ் ரஜி மெண்டல் சென்டர் பேண்ட் வாத்திய கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி இரண்டாம் இடம் பிடித்து கோப்பையைக் கைப்பற்றி உள்ளனர்.



இசைக் குழுவினர் இன்று டெல்லியிலிருந்து குன்னூர் திரும்பினர்.



அப்போது ராணுவ முகாம் நுழைவு வாயிலான பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ராணுவ வீரர்கள் இருபுறமும் நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



மேலும் ராணுவ வாகனத்தில் பிளாக் பிரிட்ஜ் பகுதியிலிருந்து ராணுவ பேண்ட் வாத்தியங்கள் இசைக்க வெற்றிக் கோப்பையுடன் ஊர்வலமாக வந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...