உடுமலையில் காலாவதியான பொருட்களை கொட்ட முயன்ற வாகனங்கள் சிறைபிடிப்பு - அபராதம் விதித்த ஊராட்சி நிர்வாகம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காலாவதியான பொருட்களை ஏற்றிவந்து நெடுஞ்சாலையோரங்களில் கொட்ட முயன்ற இரண்டு வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அந்த லாரிகளுக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் வாகனங்களில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர்.

குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவில் கோழிக்கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் கட்டிடக் கழிவுகள் என மண்ணுக்கும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பலவிதமான குப்பைகள் காலாவதியான பொருட்கள் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒரு சில கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து குப்பைகளைக் கொட்டும் வாகனங்களை சிறைபிடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.



அந்த வகையில், கணபதிபாளையம் ஊராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான காலாவதியான குளிர்பானங்களை கொண்டு வந்து கொட்டிய வேனை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

தகவலறிந்து வந்த ஊராட்சி நிர்வாகத்தினர், குப்பைகளை கொட்ட முயன்ற அந்த வாகனத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.



இந்தநிலையில், அந்த பகுதிக்கு அருகில் கழிவுகளை கொட்டிய லாரியையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.



தூத்துக்குடியிலிருந்து வாழைத்தார்களை ஏற்றி வந்த அந்த லாரி, உடுமலையில் வாழைத்தார்களை இறக்கி விட்டு திரும்பி செல்லும்போது கழிவுகளை கொட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அந்த லாரிக்கும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காலாவதியான கழிவுகளை கொட்ட முயன்ற வாகனங்களை அடுத்தடுத்து பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...