உடுமலையில் காலாவதியான பொருட்களை கொட்ட முயன்ற வாகனங்கள் சிறைபிடிப்பு - அபராதம் விதித்த ஊராட்சி நிர்வாகம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காலாவதியான பொருட்களை ஏற்றிவந்து நெடுஞ்சாலையோரங்களில் கொட்ட முயன்ற இரண்டு வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அந்த லாரிகளுக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் வாகனங்களில் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர்.

குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவில் கோழிக்கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் கட்டிடக் கழிவுகள் என மண்ணுக்கும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பலவிதமான குப்பைகள் காலாவதியான பொருட்கள் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒரு சில கிராமப்பகுதிகளில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து குப்பைகளைக் கொட்டும் வாகனங்களை சிறைபிடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.



அந்த வகையில், கணபதிபாளையம் ஊராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான காலாவதியான குளிர்பானங்களை கொண்டு வந்து கொட்டிய வேனை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

தகவலறிந்து வந்த ஊராட்சி நிர்வாகத்தினர், குப்பைகளை கொட்ட முயன்ற அந்த வாகனத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.



இந்தநிலையில், அந்த பகுதிக்கு அருகில் கழிவுகளை கொட்டிய லாரியையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.



தூத்துக்குடியிலிருந்து வாழைத்தார்களை ஏற்றி வந்த அந்த லாரி, உடுமலையில் வாழைத்தார்களை இறக்கி விட்டு திரும்பி செல்லும்போது கழிவுகளை கொட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அந்த லாரிக்கும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காலாவதியான கழிவுகளை கொட்ட முயன்ற வாகனங்களை அடுத்தடுத்து பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...