கோவை அருகே கால்நடை மருத்துவ முகாம் - நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி!

கோவை வீரியம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் 142 நாய்கள், 8 பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


கோவை: கோவை காளப்பட்டி எஸ்.எஸ் குளம் ஒன்றியம், வீரியம்பாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் ராஷ்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா 2021 22 திட்டத்தின் கீழ், நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள் சாமி தலைமை வகித்து வெறிநோய் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக பேசினார்.

தொடர்ந்து வெறிநோய் தடுப்பு குறித்து ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.



அதைத்தொடர்ந்து வெறி நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள், ஊர் மக்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.



இம்முகாமில் கோவை கோட்ட உதவி இயக்குனர் இளங்கோ பிரதம மருத்துவர் சங்கர் மற்றும் கோவில்பாளையம் கால்நடை மருத்துவர் இளங்கோ முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் மோகன்ராஜ், நித்தியவள்ளி, சபிதா, பவ்யா, ஹேமலதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர்.



மேலும் முகாமில் 142 நாய்களுக்கும் 8 பூனைகளுக்கும் இலவசமாக வெறிநோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. முகாமில் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் தங்கராஜ் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கந்தசாமி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...