கோவை அருகே கால்நடை மருத்துவ முகாம் - நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி!

கோவை வீரியம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த கால்நடை மருத்துவ முகாமில் 142 நாய்கள், 8 பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


கோவை: கோவை காளப்பட்டி எஸ்.எஸ் குளம் ஒன்றியம், வீரியம்பாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் ராஷ்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா 2021 22 திட்டத்தின் கீழ், நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள் சாமி தலைமை வகித்து வெறிநோய் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக பேசினார்.

தொடர்ந்து வெறிநோய் தடுப்பு குறித்து ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.



அதைத்தொடர்ந்து வெறி நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள், ஊர் மக்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.



இம்முகாமில் கோவை கோட்ட உதவி இயக்குனர் இளங்கோ பிரதம மருத்துவர் சங்கர் மற்றும் கோவில்பாளையம் கால்நடை மருத்துவர் இளங்கோ முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் மோகன்ராஜ், நித்தியவள்ளி, சபிதா, பவ்யா, ஹேமலதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர்.



மேலும் முகாமில் 142 நாய்களுக்கும் 8 பூனைகளுக்கும் இலவசமாக வெறிநோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. முகாமில் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் தங்கராஜ் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கந்தசாமி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...