வால்பாறையில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளியில் சார் ஆட்சியர் ஆய்வு!

கோவை மாவட்டம் வால்பாறையில் செயல்பட்டுவரும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியில், குழந்தைகள் படிப்பு திறன் மற்றும் பள்ளியின் சுகாதாரம் குறித்து சார் ஆட்சியர் பிரியங்கா ஆய்வு.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை கக்கன் காலனி பகுதியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டுவருகிறது.

இங்கு சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியை சார் ஆட்சியர் பிரியங்கா ஆய்வு செய்தார்.



குழந்தைகள் படிப்பு திறன் மற்றும் பள்ளியின் சுகாதாரம் போன்றவைகளையும் அப்போது அவர் ஆய்வு செய்தார்.

மேலும், சிறுவர் பூங்கா பகுதியில் கழிவுநீர் கால்வாய் நடைபாதையில் குண்டும் குழியுமாக உள்ள பகுதி சீரமைக்கப்படாமல் உள்ளது.



இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட சார் ஆட்சியர், அதனை ஆய்வு செய்ததோடு, சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...