வால்பாறையில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளியில் சார் ஆட்சியர் ஆய்வு!

கோவை மாவட்டம் வால்பாறையில் செயல்பட்டுவரும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியில், குழந்தைகள் படிப்பு திறன் மற்றும் பள்ளியின் சுகாதாரம் குறித்து சார் ஆட்சியர் பிரியங்கா ஆய்வு.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை கக்கன் காலனி பகுதியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டுவருகிறது.

இங்கு சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியை சார் ஆட்சியர் பிரியங்கா ஆய்வு செய்தார்.



குழந்தைகள் படிப்பு திறன் மற்றும் பள்ளியின் சுகாதாரம் போன்றவைகளையும் அப்போது அவர் ஆய்வு செய்தார்.

மேலும், சிறுவர் பூங்கா பகுதியில் கழிவுநீர் கால்வாய் நடைபாதையில் குண்டும் குழியுமாக உள்ள பகுதி சீரமைக்கப்படாமல் உள்ளது.



இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட சார் ஆட்சியர், அதனை ஆய்வு செய்ததோடு, சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...