கோவையில் செல்போன் பேசியதை கண்டித்ததால் விபரீதம் - மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார்!

கோவை சங்கனூரில் செல்போன் பேசியதை கண்டித்ததால் மனைவி வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாக, பாதிக்கப்பட்ட கணவர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவை சங்கனூர், தெனாலிராமன் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் வேடியப்பன். இவரது மனைவி சந்தியா.

இருவரும் காதலித்து பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆன நிலையில், 27 வயதான சந்தியா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முந்தினம் வழக்கம்போல் செல்போனில் பேசிகொண்டிருந்த சந்தியாவை வேடியப்பன் கண்டித்து சண்டை போட்டுள்ளார். இதில் கோபமடைந்த சந்தியா வீட்டை விட்டு சென்றுவிட்டததாக தெரிகிறது.

இதையடுத்து, வேடியப்பன் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன சந்தியாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...