கோவையில் செல்போன் பேசியதை கண்டித்ததால் விபரீதம் - மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார்!

கோவை சங்கனூரில் செல்போன் பேசியதை கண்டித்ததால் மனைவி வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாக, பாதிக்கப்பட்ட கணவர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவை சங்கனூர், தெனாலிராமன் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் வேடியப்பன். இவரது மனைவி சந்தியா.

இருவரும் காதலித்து பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆன நிலையில், 27 வயதான சந்தியா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முந்தினம் வழக்கம்போல் செல்போனில் பேசிகொண்டிருந்த சந்தியாவை வேடியப்பன் கண்டித்து சண்டை போட்டுள்ளார். இதில் கோபமடைந்த சந்தியா வீட்டை விட்டு சென்றுவிட்டததாக தெரிகிறது.

இதையடுத்து, வேடியப்பன் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன சந்தியாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...