கோவையில் செல்போன் பேசியதை கண்டித்ததால் விபரீதம் - மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார்!

கோவை சங்கனூரில் செல்போன் பேசியதை கண்டித்ததால் மனைவி வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாக, பாதிக்கப்பட்ட கணவர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவை சங்கனூர், தெனாலிராமன் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் வேடியப்பன். இவரது மனைவி சந்தியா.

இருவரும் காதலித்து பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆன நிலையில், 27 வயதான சந்தியா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முந்தினம் வழக்கம்போல் செல்போனில் பேசிகொண்டிருந்த சந்தியாவை வேடியப்பன் கண்டித்து சண்டை போட்டுள்ளார். இதில் கோபமடைந்த சந்தியா வீட்டை விட்டு சென்றுவிட்டததாக தெரிகிறது.

இதையடுத்து, வேடியப்பன் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன சந்தியாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...