கோவை சின்னவேடம்பட்டியில் பள்ளி கட்டிட மராமத்து பணிகளை துவக்கி வைத்தார் மேயர் கல்பனா!

கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 11 வது வார்டு சின்னவேடம்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் புதிய கட்டிடம் மற்றும் மராமத்து பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியில் மாநகராட்சி பள்ளியில் கட்டிடம் மற்றும் மராமத்து பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 11வது வார்டு சின்னவேடம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில், புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில், புதிய பள்ளி கட்டிடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதே போல மாநகராட்சி கல்விக்குழு மற்றும் 33 சதவீத தனியார் பங்களிப்போடு ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகளின்மேற்கூரைகள் மாற்றம் உள்ளிட்ட மராமத்து பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் மோகனசுந்தரி உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...