கோவை சின்னவேடம்பட்டியில் பள்ளி கட்டிட மராமத்து பணிகளை துவக்கி வைத்தார் மேயர் கல்பனா!

கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 11 வது வார்டு சின்னவேடம்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் புதிய கட்டிடம் மற்றும் மராமத்து பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியில் மாநகராட்சி பள்ளியில் கட்டிடம் மற்றும் மராமத்து பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 11வது வார்டு சின்னவேடம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில், புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில், புதிய பள்ளி கட்டிடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதே போல மாநகராட்சி கல்விக்குழு மற்றும் 33 சதவீத தனியார் பங்களிப்போடு ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகளின்மேற்கூரைகள் மாற்றம் உள்ளிட்ட மராமத்து பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் மோகனசுந்தரி உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...