கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 11 வது வார்டு சின்னவேடம்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் புதிய கட்டிடம் மற்றும் மராமத்து பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியில் மாநகராட்சி பள்ளியில் கட்டிடம் மற்றும் மராமத்து பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 11வது வார்டு சின்னவேடம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில், புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில், புதிய பள்ளி கட்டிடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதே போல மாநகராட்சி கல்விக்குழு மற்றும் 33 சதவீத தனியார் பங்களிப்போடு ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகளின்மேற்கூரைகள் மாற்றம் உள்ளிட்ட மராமத்து பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் மோகனசுந்தரி உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 11வது வார்டு சின்னவேடம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில், புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில், புதிய பள்ளி கட்டிடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதே போல மாநகராட்சி கல்விக்குழு மற்றும் 33 சதவீத தனியார் பங்களிப்போடு ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகளின்மேற்கூரைகள் மாற்றம் உள்ளிட்ட மராமத்து பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் மோகனசுந்தரி உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.