கோவை சின்னவேடம்பட்டியில் பள்ளி கட்டிட மராமத்து பணிகளை துவக்கி வைத்தார் மேயர் கல்பனா!

கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 11 வது வார்டு சின்னவேடம்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் புதிய கட்டிடம் மற்றும் மராமத்து பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியில் மாநகராட்சி பள்ளியில் கட்டிடம் மற்றும் மராமத்து பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 11வது வார்டு சின்னவேடம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில், புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில், புதிய பள்ளி கட்டிடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதே போல மாநகராட்சி கல்விக்குழு மற்றும் 33 சதவீத தனியார் பங்களிப்போடு ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகளின்மேற்கூரைகள் மாற்றம் உள்ளிட்ட மராமத்து பணிகளும் துவங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் மோகனசுந்தரி உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...