வால்பாறையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை!

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலைகளை ஆக்கிரமித்து இருபுறமும் கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகரிகள் இயந்திரங்கள் மூலம் அகற்றினர். இதனால் வால்பாறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையின் இரு புறம் கடைகள் அமைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை வால்பாறை டவுன் பகுதியில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது.



அந்த வகையில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு பட்டியலில் உள்ளன. இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் உமா மகேஸ்வரி தலைமையில் பிரகாஷ் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



அதன்படி, புதுத்தோட்டம் பகுதியில் இருந்து வால்பாறை புதிய பேருந்து நிலையம் வரை சாலையின் இரு புறங்களிலும் உள்ள கடைகள், வாகனங்கள், நடைபாதை ஆக்கிரமிப்புகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.



காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும், இந்த ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையால், வால்பாறை பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...