வால்பாறையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை!

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலைகளை ஆக்கிரமித்து இருபுறமும் கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகரிகள் இயந்திரங்கள் மூலம் அகற்றினர். இதனால் வால்பாறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையின் இரு புறம் கடைகள் அமைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை வால்பாறை டவுன் பகுதியில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது.



அந்த வகையில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு பட்டியலில் உள்ளன. இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் உமா மகேஸ்வரி தலைமையில் பிரகாஷ் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



அதன்படி, புதுத்தோட்டம் பகுதியில் இருந்து வால்பாறை புதிய பேருந்து நிலையம் வரை சாலையின் இரு புறங்களிலும் உள்ள கடைகள், வாகனங்கள், நடைபாதை ஆக்கிரமிப்புகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.



காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும், இந்த ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையால், வால்பாறை பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...