வால்பாறையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை!

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலைகளை ஆக்கிரமித்து இருபுறமும் கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகரிகள் இயந்திரங்கள் மூலம் அகற்றினர். இதனால் வால்பாறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையின் இரு புறம் கடைகள் அமைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை வால்பாறை டவுன் பகுதியில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது.



அந்த வகையில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு பட்டியலில் உள்ளன. இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் உமா மகேஸ்வரி தலைமையில் பிரகாஷ் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



அதன்படி, புதுத்தோட்டம் பகுதியில் இருந்து வால்பாறை புதிய பேருந்து நிலையம் வரை சாலையின் இரு புறங்களிலும் உள்ள கடைகள், வாகனங்கள், நடைபாதை ஆக்கிரமிப்புகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.



காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும், இந்த ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையால், வால்பாறை பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...