கோவை குனியமுத்தூரில் பட்டப்பகலில் சாலையில் நடந்துச் சென்ற அரசு பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவியிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 4.5 சவரன் தங்கச்செயினை பறித்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு.
கோவை: குனியமுத்தூரில் பட்டப்பகலில் ஆசிரியையிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பி.கே புதூர் சாரதா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி ரேணுகாதேவி. அரசுப்பள்ளி ஆசிரியர். இவர் தனது மகளை டியூசன் அழைத்துச் செல்ல ஜெயநகர் அருகே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ரேணுகாதேவியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4.5 சவரன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர்.
அப்போது அவர் சத்தம் போட்டதால் அங்கிருந்தவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றபோது அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக ரேணுகாதேவி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் பி.கே புதூர் சாரதா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி ரேணுகாதேவி. அரசுப்பள்ளி ஆசிரியர். இவர் தனது மகளை டியூசன் அழைத்துச் செல்ல ஜெயநகர் அருகே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ரேணுகாதேவியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4.5 சவரன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர்.
அப்போது அவர் சத்தம் போட்டதால் அங்கிருந்தவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றபோது அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக ரேணுகாதேவி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.