கோவை குனியமுத்தூரில் ஆசிரியையிடம் செயின் பறிப்பு - போலீசார் விசாரணை

கோவை குனியமுத்தூரில் பட்டப்பகலில் சாலையில் நடந்துச் சென்ற அரசு பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவியிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 4.5 சவரன் தங்கச்செயினை பறித்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு.


கோவை: குனியமுத்தூரில் பட்டப்பகலில் ஆசிரியையிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பி.கே புதூர் சாரதா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி ரேணுகாதேவி. அரசுப்பள்ளி ஆசிரியர். இவர் தனது மகளை டியூசன் அழைத்துச் செல்ல ஜெயநகர் அருகே சாலையில் நடந்து சென்றார்.

அப்போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ரேணுகாதேவியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4.5 சவரன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர்.

அப்போது அவர் சத்தம் போட்டதால் அங்கிருந்தவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றபோது அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக ரேணுகாதேவி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...