கோவையில் கல்குவாரிகளுக்கு மறுஅனுமதி வழங்குவது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் - அனுமதி வழங்க மக்கள் ஒப்புதல்

கிணத்துக்கடவு அடுத்த அரசம்பாளையம் மற்றும் பணப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் 9 கல்குவாரிகளுக்கு மறுஅனுமதி வழங்குவது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் மறுஅனுமதி வழங்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செயல்பட்டு வரும் 9 கல்குவாரிகளுக்கு மறு அனுமதி வழங்கலாம் என கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட அரசம்பாளையம் மற்றும் பணப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 9 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி கால அவகாசம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதற்காக அந்த கல்குவாரிகள் சார்பில் மறு அனுமதி கோரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.



இந்நிலையில், 9 கல்குவாரிகளுக்கும் மறு அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் கிணத்துக்கடவு - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.



மாவட்ட வருவாய் அதிகாரி செல்விசுரபி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.



இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அரசம்பாளையம் மற்றும் பணப்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



தற்போது இயங்கி வரும் கல்குவாரிகளால் எந்த சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை, இந்த கல்குவாரிகளால் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளது என்றும், எனவே கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கலாம் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.



மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன், தற்போது இயங்கி வரும் கல்குவாரிகளை முறையாக ஆய்வு செய்து அரசு சட்ட திட்டங்களை முறைப்படுத்தி பிறகு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பான்மையானோர் எதிர்ப்பு தெரிவிக்காததால் கல்குவாரிகள் இயக்க அனுமதி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...