கோவையில் கல்குவாரிகளுக்கு மறுஅனுமதி வழங்குவது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் - அனுமதி வழங்க மக்கள் ஒப்புதல்

கிணத்துக்கடவு அடுத்த அரசம்பாளையம் மற்றும் பணப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் 9 கல்குவாரிகளுக்கு மறுஅனுமதி வழங்குவது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் மறுஅனுமதி வழங்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செயல்பட்டு வரும் 9 கல்குவாரிகளுக்கு மறு அனுமதி வழங்கலாம் என கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட அரசம்பாளையம் மற்றும் பணப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 9 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி கால அவகாசம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதற்காக அந்த கல்குவாரிகள் சார்பில் மறு அனுமதி கோரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.



இந்நிலையில், 9 கல்குவாரிகளுக்கும் மறு அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் கிணத்துக்கடவு - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.



மாவட்ட வருவாய் அதிகாரி செல்விசுரபி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.



இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அரசம்பாளையம் மற்றும் பணப்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



தற்போது இயங்கி வரும் கல்குவாரிகளால் எந்த சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை, இந்த கல்குவாரிகளால் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளது என்றும், எனவே கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கலாம் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.



மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன், தற்போது இயங்கி வரும் கல்குவாரிகளை முறையாக ஆய்வு செய்து அரசு சட்ட திட்டங்களை முறைப்படுத்தி பிறகு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பான்மையானோர் எதிர்ப்பு தெரிவிக்காததால் கல்குவாரிகள் இயக்க அனுமதி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...