உடுமலையில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாணவ மாணவிகளுக்கான ஆளுமை மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு 'யாதுமானவள்' என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.


திருப்பூர்: உடுமலை ராஜலட்சுமி கெங்குசாமி அறக் கட்டளை கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ரோட்டரி சங்கங்கள் சார்பில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இந்த ஆளுமை மேம்பாட்டுக் கருத்தரங்கில் டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் விருந்தினராக கலந்து கொண்டு 'யாதுமானவள்' என்கிற தலைப்பில் பேசினார்.

அதில், இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சாதனைகள் புரிவதில் பெண்கள் முன்னேறி வருகின்றனர். தொலைபேசிகளை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மாணவ-மாணவியர் பெற்றோர் மற்றும் சான்றோர்கள் அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.



மன தைரியத்துடன் தன்னம்பிக்கையுடன் எந்த விஷயம் துவங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஆர்வத்துடன் செயல்பட வேண்டும், என்றார். இதில், ஏராளமான மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



இந்த நிகழ்ச்சியில், திட்ட அலுவலர் இயக்குனர் விஜயகுமாரி, திட்ட அலுவலர் ரத்தினவேல், உடுமலை ரோட்டரி தேஜஸ் சங்க தலைவர் சத்யம் பாபு, திட்ட இணைய அலுவலர்கள் எஸ்.எம்.நாகராஜ், முருகநாதன் மற்றும் உடுமலை ரோட்டரி சங்கத் தலைவர் ரகுநந்தன் ராஜு, ரோட்டரி கேலக்ஸி தலைவர் வழக்கறிஞர் பொன்ராஜ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...