உடுமலையில் பாரம்பரியம் மாறாம தைப்பூசக் கொண்டாட்டம் - கிராம மக்கள் வழிபாடு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாரம்பரியம் மாறாமல் கிராம மக்கள் தைப்பூச விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். கிராமிய கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணபதிபாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி கிராமிய கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.



கணபதிபாளையம் உச்சிமாகாளியம்மன் கோவில் முன்பு பாரம்பரியம் மாறாமல் நடைபெற்ற இந்த விழாவுக்கு பிரபாகர், சவுந்திரராஜ், சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சில் அரிமா சண்முகம், வர்ஷினி இளங்கோவன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் கோவை பம்பை இசைக் குழுவினரின் பம்பை இசையுடன், வாளவாடி பயிற்சிப்பள்ளியின் சிலம்பம், களரி மற்றும் கோவை காவடி குழுவினரின் காவடி ஆட்டம் நடைபெற்றது.



அத்துடன் கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் முதல் குழந்தைகள் அனைவரும் கலந்துகொண்டு கலக்கிய வட்டக்கும்மி, வள்ளிக்கும்மி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இறுதி நிகழ்ச்சியாக அன்னமார் கதை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...