உடுமலையில் பாரம்பரியம் மாறாம தைப்பூசக் கொண்டாட்டம் - கிராம மக்கள் வழிபாடு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாரம்பரியம் மாறாமல் கிராம மக்கள் தைப்பூச விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். கிராமிய கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணபதிபாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி கிராமிய கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.



கணபதிபாளையம் உச்சிமாகாளியம்மன் கோவில் முன்பு பாரம்பரியம் மாறாமல் நடைபெற்ற இந்த விழாவுக்கு பிரபாகர், சவுந்திரராஜ், சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சில் அரிமா சண்முகம், வர்ஷினி இளங்கோவன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் கோவை பம்பை இசைக் குழுவினரின் பம்பை இசையுடன், வாளவாடி பயிற்சிப்பள்ளியின் சிலம்பம், களரி மற்றும் கோவை காவடி குழுவினரின் காவடி ஆட்டம் நடைபெற்றது.



அத்துடன் கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் முதல் குழந்தைகள் அனைவரும் கலந்துகொண்டு கலக்கிய வட்டக்கும்மி, வள்ளிக்கும்மி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இறுதி நிகழ்ச்சியாக அன்னமார் கதை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...