உடுமலையில் பாரம்பரியம் மாறாம தைப்பூசக் கொண்டாட்டம் - கிராம மக்கள் வழிபாடு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாரம்பரியம் மாறாமல் கிராம மக்கள் தைப்பூச விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். கிராமிய கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணபதிபாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி கிராமிய கலைவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.



கணபதிபாளையம் உச்சிமாகாளியம்மன் கோவில் முன்பு பாரம்பரியம் மாறாமல் நடைபெற்ற இந்த விழாவுக்கு பிரபாகர், சவுந்திரராஜ், சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சில் அரிமா சண்முகம், வர்ஷினி இளங்கோவன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் கோவை பம்பை இசைக் குழுவினரின் பம்பை இசையுடன், வாளவாடி பயிற்சிப்பள்ளியின் சிலம்பம், களரி மற்றும் கோவை காவடி குழுவினரின் காவடி ஆட்டம் நடைபெற்றது.



அத்துடன் கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் முதல் குழந்தைகள் அனைவரும் கலந்துகொண்டு கலக்கிய வட்டக்கும்மி, வள்ளிக்கும்மி நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இறுதி நிகழ்ச்சியாக அன்னமார் கதை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...