கோவை அருகே புதிய நியாயவிலைக் கடை திறப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு!

கோவை மாவட்டம் கோவிந்தன்நாயக்கன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடையை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்துவைத்தார்.


கோவை: கோவை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட கோவிந்தநாயக்கன்பாளையத்தில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டது.



இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்து, அட்டைதாரர்களுக்கான முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். பேரூராட்சித்தலைவர் ஜெனார்த்தனன், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் விமல்ராஜ், கூட்டுறவு இணை பதிவாளர் உமாகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று இந்த ரேசன் கடை கோவிந்தநாயக்கன்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

காலை 8 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் முழு நேர ரேசன்கடையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணைய் வகைகள், பருப்பு வகைகள் மற்றும் டீ தூள் உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...