கோவை மாவட்டம் கோவிந்தன்நாயக்கன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடையை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்துவைத்தார்.
கோவை: கோவை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட கோவிந்தநாயக்கன்பாளையத்தில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டது.

இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்து, அட்டைதாரர்களுக்கான முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். பேரூராட்சித்தலைவர் ஜெனார்த்தனன், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் விமல்ராஜ், கூட்டுறவு இணை பதிவாளர் உமாகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று இந்த ரேசன் கடை கோவிந்தநாயக்கன்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.
காலை 8 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் முழு நேர ரேசன்கடையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணைய் வகைகள், பருப்பு வகைகள் மற்றும் டீ தூள் உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துக்கொண்டனர்.
இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்து, அட்டைதாரர்களுக்கான முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். பேரூராட்சித்தலைவர் ஜெனார்த்தனன், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் விமல்ராஜ், கூட்டுறவு இணை பதிவாளர் உமாகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று இந்த ரேசன் கடை கோவிந்தநாயக்கன்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.
காலை 8 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் முழு நேர ரேசன்கடையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணைய் வகைகள், பருப்பு வகைகள் மற்றும் டீ தூள் உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துக்கொண்டனர்.