கோவை தொண்டாமுத்தூர் அருகே குளத்தில் வழுக்கி விழுந்த தம்பியை மீட்க முயன்ற 8-ம் வகுப்பு மாணவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை தொண்டாமுத்தூரை அடுத்த வேடபட்டியை சேர்ந்தவர் மரிய ஜான்சன். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஜார்ஜ் டேனியல், கேரல் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் ஜார்ஜ் டானியல் சுண்டப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
விடுமுறை தினமான நேற்று மரிய ஜான்சன் தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு வேடப்பட்டி புதுக்குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, இளைய மகன் கால் வழுக்கி குளத்திற்குள் விழுந்தார். தம்பியை மீட்பதற்காக ஜார்ஜ் டேனியல் குளத்திற்குள் குதித்துள்ளார். அப்போது, ஜார்ஜ் டேனியலும் நீரிலும் நீருக்குள் மூழ்கினார்.
உடனடியாக தந்தை மரிய ஜான்சன் நீரில் மூழ்கிய இரு மகன்களையும் மீட்டார். அப்போது மூத்த மகன் ஜார்ஜ் டேனியல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உதவியோடு ஜார்ஜ் டேனியலை கோவை அரசு மருத்துவமனைக்கு மரியஜான்சன் கொண்டுசென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ஜார்ஜ் டேனியல் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
விடுமுறை தினமான நேற்று மரிய ஜான்சன் தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு வேடப்பட்டி புதுக்குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, இளைய மகன் கால் வழுக்கி குளத்திற்குள் விழுந்தார். தம்பியை மீட்பதற்காக ஜார்ஜ் டேனியல் குளத்திற்குள் குதித்துள்ளார். அப்போது, ஜார்ஜ் டேனியலும் நீரிலும் நீருக்குள் மூழ்கினார்.
உடனடியாக தந்தை மரிய ஜான்சன் நீரில் மூழ்கிய இரு மகன்களையும் மீட்டார். அப்போது மூத்த மகன் ஜார்ஜ் டேனியல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உதவியோடு ஜார்ஜ் டேனியலை கோவை அரசு மருத்துவமனைக்கு மரியஜான்சன் கொண்டுசென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ஜார்ஜ் டேனியல் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.