தம்பியை மீட்பதற்காக குளத்தில் குதித்த 8ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி - கோவை தொண்டாமுத்தூர் அருகே சோகம்!

கோவை தொண்டாமுத்தூர் அருகே குளத்தில் வழுக்கி விழுந்த தம்பியை மீட்க முயன்ற 8-ம் வகுப்பு மாணவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை தொண்டாமுத்தூரை அடுத்த வேடபட்டியை சேர்ந்தவர் மரிய ஜான்சன். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஜார்ஜ் டேனியல், கேரல் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் ஜார்ஜ் டானியல் சுண்டப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

விடுமுறை தினமான நேற்று மரிய ஜான்சன் தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு வேடப்பட்டி புதுக்குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, இளைய மகன் கால் வழுக்கி குளத்திற்குள் விழுந்தார். தம்பியை மீட்பதற்காக ஜார்ஜ் டேனியல் குளத்திற்குள் குதித்துள்ளார். அப்போது, ஜார்ஜ் டேனியலும் நீரிலும் நீருக்குள் மூழ்கினார்.

உடனடியாக தந்தை மரிய ஜான்சன் நீரில் மூழ்கிய இரு மகன்களையும் மீட்டார். அப்போது மூத்த மகன் ஜார்ஜ் டேனியல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உதவியோடு ஜார்ஜ் டேனியலை கோவை அரசு மருத்துவமனைக்கு மரியஜான்சன் கொண்டுசென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ஜார்ஜ் டேனியல் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...