பல்லடம் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருநாளையொட்டி தேர் திருவிழா ஊர்வலம்

பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் முத்துக்குமார சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற தேர் திருவிழாவில் மேளதாளங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள முத்துக்குமார சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது.



பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூச திருநாளை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமத்தோடு தைப்பூசத் திருவிழா தொடங்கியது.



முருகருக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் உச்சிக்கால பூஜைகளோடு தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வாக முத்துக்குமாரசுவாமி உற்சவர் சிலை தேரில் பவனி நடைபெற்றது.



பக்தர்களின் அரோகரா முழக்கத்தோடு வானவேடிக்கைகளுடன், மேள தாளங்கள் முழங்க, முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் கிரிவலப் பாதையில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...