பல்லடம் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருநாளையொட்டி தேர் திருவிழா ஊர்வலம்

பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் முத்துக்குமார சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற தேர் திருவிழாவில் மேளதாளங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள முத்துக்குமார சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது.



பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூச திருநாளை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமத்தோடு தைப்பூசத் திருவிழா தொடங்கியது.



முருகருக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் உச்சிக்கால பூஜைகளோடு தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வாக முத்துக்குமாரசுவாமி உற்சவர் சிலை தேரில் பவனி நடைபெற்றது.



பக்தர்களின் அரோகரா முழக்கத்தோடு வானவேடிக்கைகளுடன், மேள தாளங்கள் முழங்க, முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் கிரிவலப் பாதையில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...