கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சரவணம்பட்டி அருகே வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நிலையில், வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே தை பூசத்துக்காக கோயிலுக்கு சென்றவர்கள் வீட்டில் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சரவணம்பட்டி அருகேயுள்ள காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மகேந்திரன் (62) - ரஞ்சனா (46) தம்பதி. 2 மகள்களுடன் வசித்து வந்த இவர்கள், நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு தைப்பூசத்திற்காக மருதமலைக்கு குடும்பத்துடன் பாதயாத்திரை சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மூன்று மணி அளவில் மகேந்திரன் வீட்டின் அக்கம்பக்கத்தினர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீடு திறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், மருதமலைக்கு பாதயாத்திரை சென்ற மகேந்திரன் தனது குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சரவணம்பட்டி போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டுக்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...