கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சரவணம்பட்டி அருகே வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நிலையில், வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே தை பூசத்துக்காக கோயிலுக்கு சென்றவர்கள் வீட்டில் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சரவணம்பட்டி அருகேயுள்ள காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மகேந்திரன் (62) - ரஞ்சனா (46) தம்பதி. 2 மகள்களுடன் வசித்து வந்த இவர்கள், நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு தைப்பூசத்திற்காக மருதமலைக்கு குடும்பத்துடன் பாதயாத்திரை சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மூன்று மணி அளவில் மகேந்திரன் வீட்டின் அக்கம்பக்கத்தினர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீடு திறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், மருதமலைக்கு பாதயாத்திரை சென்ற மகேந்திரன் தனது குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சரவணம்பட்டி போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டுக்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...