துணிவு பட பாணியில் தாராபுரம் அருகே கனரா வங்கி கிளையில் துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி!

துணிவு திரைப்பட பாணியில் தாராபுரம் அடுத்த அலங்கியம் கனரா வங்கி கிளையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாராபுரம் அடுத்த காந்தி நகரில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரது மகன் சுரேஷ் (19) தாராபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.



இந்த நிலையில் இளைஞர் சுரேஷ், துணிவு மற்றும் கொரியா பட பாணியில் கனரா வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு கருப்பு நிற பர்தா அணிந்து கை, துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு (டைம்பாம்) எடுத்துக்கொண்டு கனரா வங்கிக்குள் நுழைந்துள்ளார்.



வங்கி மேலாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி வெடிகுண்டை வெடிக்க வைப்பதாக கூறி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதனால் அலங்கியம் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்ல் நிலவியது.

அப்போது அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் சுரேஷின் மண்டையில் அடித்த நிலையில், பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அதன் பிறகு அலங்கியம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



இதனையடுத்து அங்கு வந்த அலங்கியம் போலீசார் சுரேஷை கைது செய்து அலங்கியம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக தாராபுரம் டிஎஸ்பி தனராசு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் பர்தா அணிந்து வந்த சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சினிமா படங்களை பார்த்து பேங்க் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும்.

மேலும், டம்மி கை துப்பாக்கி, டம்மி டைம் பாம், கத்தி மற்றும் கருப்பு நிற பர்தா, ஆகியவற்றை ஆன்லைன் ஷாப்பிங் தளம் மூலம் வாங்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சுரேஷை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடிக்கும்போது தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்க தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...