பல்லடத்தில் தொடரும் பைக் திருட்டு - திருடர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார்!

பல்லடத்தில் இரவு நேரங்களில் பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இரவுநேர ரோந்து பணிகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடுபோகும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ராயர்பாளையம், வெங்கடாபுரம், பச்சாபாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் திருடு போவது தொடர் கதையாகி வருகிறது.

திருடர்கள் இருசக்கர வாகனங்களின் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பல்லடம் பச்சாபாளையத்தில் வசித்து வரும் நிகில் என்பவர் தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.



காலையில் எழுந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிகில், பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று நேற்றிரவு பல்லடம் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறமாக வசித்து வரும் வேலுச்சாமி என்பவரது இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.



மேலும் வேலுச்சாமி வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு வாகனங்களை உடைக்க முயன்று உடைக்க முடியாததால் வேலுச்சாமியின் வாகனத்தை மட்டும் திருடி சென்றுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக ஏழு இடங்களில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் திருடப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும் திருடர்களை பிடிக்க முடியாமல் பல்லடம் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், பல்லடம் முழுவதும் போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...