உலக புற்றுநோய் தினம் - கோவை மாநகர காவல்துறை சார்பில் பயிற்சி முகாம்!

உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி, கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கு புற்றுநோய் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.



கோவை: மக்களிடம் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 4-ந் தேதியை ‘உலக புற்றுநோய் தினமாக’ கடந்த 2000-மாவது ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. உலக அளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், அதுகுறித்த சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான உலக புற்றுநோய் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர காவல்துறை சார்பில் பீளமேடு அருகே தனியார் கல்லூரியில் மாநகரில் உள்ள பெண் காவலர்களை மையப்படுத்தி புற்றுநோய் குறித்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.



இதனை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.



அப்போது பேசிய அவர், புற்றுநோய் பற்றி பழைய சினிமா நம்மை பயமுறுத்தியது. ஆனால் இன்று அப்படியல்ல. நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.



எந்த பிரச்சினையை எப்படி அணுகுகிறோமோ அப்படித்தான் அது சாத்தியமாகிறது. புற்றுநோய் குறித்த இந்த பயிலரங்கு நல்ல மாற்றங்களை உருவாக்கும் என நம்புகிறேன், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...