உலக புற்றுநோய் தினம் - கோவை மாநகர காவல்துறை சார்பில் பயிற்சி முகாம்!

உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி, கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கு புற்றுநோய் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.



கோவை: மக்களிடம் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 4-ந் தேதியை ‘உலக புற்றுநோய் தினமாக’ கடந்த 2000-மாவது ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. உலக அளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், அதுகுறித்த சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான உலக புற்றுநோய் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.



இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர காவல்துறை சார்பில் பீளமேடு அருகே தனியார் கல்லூரியில் மாநகரில் உள்ள பெண் காவலர்களை மையப்படுத்தி புற்றுநோய் குறித்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.



இதனை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.



அப்போது பேசிய அவர், புற்றுநோய் பற்றி பழைய சினிமா நம்மை பயமுறுத்தியது. ஆனால் இன்று அப்படியல்ல. நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.



எந்த பிரச்சினையை எப்படி அணுகுகிறோமோ அப்படித்தான் அது சாத்தியமாகிறது. புற்றுநோய் குறித்த இந்த பயிலரங்கு நல்ல மாற்றங்களை உருவாக்கும் என நம்புகிறேன், என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...