கோவையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த வாகனங்கள், சாலையோர வீட்டின் மீது மோதி விபத்து - ஒருவர் பலி

கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியதோடு, சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மீதும் மோதி நின்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.



கோவை: சேலம் மாவட்டத்தில் இருந்து கேரளா நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கோவை மதுக்கரை நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே வந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மற்றொரு லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மீது அந்த லாரி மோதியது.



அதிகபாரத்துடன் இருந்ததால் அடுத்ததடுத்து இரும்பு அறிவிப்பு பலகைகள் மற்றும் சாலை ஓரத்தில் வீட்டுடன் இருந்த கடை மீது அந்த லாரி பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த பாலத்துறையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

லாரி ஓட்டுநர் பாஸ்கரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நேரத்தில் அந்த வீட்டின் வெளியே யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...