கோவை வனத்துறை சார்பில் உலக ஈர நில தினம் கொண்டாட்டம்

உலக ஈர நில தினத்தை முன்னிட்டு, கோவை வனக்கோட்டம் சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் உலக ஈர நில தினம் கொண்டாட்டம். ஈரநிலத்தின் முக்கியத்துவம் குறித்து சைக்கிள் பேரணி மூலம் விழிப்புணர்வு.



கோவை: கோவை வனக்கோட்டம் சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் உலக ஈர நில தினம் கொண்டாடப்பட்டது.



இதில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம் ராமசுப்பிரமணியம், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தாழிப் பனை மரக்கன்றுகள் குளத்தின் கரையில் நடப்பட்டன. பின்னர் மாணவர்களிடையே ஈர நிலங்களைப் பாதுகாப்பு குறித்து அலுவலர்களால் உரை வழங்கப்பட்டது. ஈர நில தினத்தையொட்டி பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் உலக வன உயிரின வாரத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.



ஈர நிலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.



ஈரநில நண்பர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியதோடு உலகில் உள்ள ஈர நிலங்களைக் காக்கும் பொருட்டு உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி கோவை மாநகராட்சி மற்றும் CUBE அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டது. பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், வனச்சரக அலுவலர்கள் மற்றும் மதுக்கரை வனச்சரக வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...