கோவை வனத்துறை சார்பில் உலக ஈர நில தினம் கொண்டாட்டம்

உலக ஈர நில தினத்தை முன்னிட்டு, கோவை வனக்கோட்டம் சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் உலக ஈர நில தினம் கொண்டாட்டம். ஈரநிலத்தின் முக்கியத்துவம் குறித்து சைக்கிள் பேரணி மூலம் விழிப்புணர்வு.



கோவை: கோவை வனக்கோட்டம் சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் உலக ஈர நில தினம் கொண்டாடப்பட்டது.



இதில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம் ராமசுப்பிரமணியம், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தாழிப் பனை மரக்கன்றுகள் குளத்தின் கரையில் நடப்பட்டன. பின்னர் மாணவர்களிடையே ஈர நிலங்களைப் பாதுகாப்பு குறித்து அலுவலர்களால் உரை வழங்கப்பட்டது. ஈர நில தினத்தையொட்டி பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் உலக வன உயிரின வாரத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.



ஈர நிலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.



ஈரநில நண்பர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியதோடு உலகில் உள்ள ஈர நிலங்களைக் காக்கும் பொருட்டு உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி கோவை மாநகராட்சி மற்றும் CUBE அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டது. பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், வனச்சரக அலுவலர்கள் மற்றும் மதுக்கரை வனச்சரக வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...