'ஓம் நமச்சிவாயா என்பதை அனைவரும் சொல்லலாம்..!' - கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தகவல்

ஓம் நமச்சிவாயா என்பது அதற்கென்று உண்டான சில மந்திரங்கள் உள்ளன. அப்படிதான் சொல்ல வேண்டும், ஆனால் ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம் என்று திருப்பூரில் நடந்த விழாவில் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினத்தில் 57ஆவது குருமகா சந்நிதானங்களின் மகர ஆதிரை திருநான் மங்கல குருவிழா, ஸ்ரீ ரத்ன விஜயாம்பிகை ஆலய மகா கும்பாபிஷேக விழா, ஆன்மார்த்தசுவாமி கருவறை அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழாவின் முதலாவதாக இன்று 57ஆவது குருமகா சந்நிதானங்களின் மகர ஆதிரை திருநான் மங்கல குருவிழா கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது.

இந்த குருபூஜை விழாவில் ஸ்ரீமாணிக்கவாசக பெருமானுக்கு சர்க்கர அபிஷேகமும், தேவார இன்னிசையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.



மங்கள இசை, கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் ரத உற்சவ திருவீதி உலா நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து மகாயாகமும், பராயண வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் அருட் பணி சித்தர் விருது, சிவாச்சாரிய திலகம், சைவநெறி செஞ்சுடர், சிவாச்சாரிய திலகம் என 12 திருவண்பர்களுக்கு ஞான விருதுகள் வழங்கப்பட்டது.



முன்னதாக கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் செய்தியாளர்கள் சந்திப்பில், ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம், முழு பலனையும் தரவல்லது ஹம் நமச்சிவாயா என்பது அதுக்குன்னு உண்டான சில மந்திரங்கள் உள்ளன. அப்படிதான் சொல்ல வேண்டும். ஆனால் ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம் என்று தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...