'ஓம் நமச்சிவாயா என்பதை அனைவரும் சொல்லலாம்..!' - கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தகவல்

ஓம் நமச்சிவாயா என்பது அதற்கென்று உண்டான சில மந்திரங்கள் உள்ளன. அப்படிதான் சொல்ல வேண்டும், ஆனால் ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம் என்று திருப்பூரில் நடந்த விழாவில் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினத்தில் 57ஆவது குருமகா சந்நிதானங்களின் மகர ஆதிரை திருநான் மங்கல குருவிழா, ஸ்ரீ ரத்ன விஜயாம்பிகை ஆலய மகா கும்பாபிஷேக விழா, ஆன்மார்த்தசுவாமி கருவறை அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழாவின் முதலாவதாக இன்று 57ஆவது குருமகா சந்நிதானங்களின் மகர ஆதிரை திருநான் மங்கல குருவிழா கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது.

இந்த குருபூஜை விழாவில் ஸ்ரீமாணிக்கவாசக பெருமானுக்கு சர்க்கர அபிஷேகமும், தேவார இன்னிசையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.



மங்கள இசை, கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் ரத உற்சவ திருவீதி உலா நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து மகாயாகமும், பராயண வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் அருட் பணி சித்தர் விருது, சிவாச்சாரிய திலகம், சைவநெறி செஞ்சுடர், சிவாச்சாரிய திலகம் என 12 திருவண்பர்களுக்கு ஞான விருதுகள் வழங்கப்பட்டது.



முன்னதாக கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் இராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் செய்தியாளர்கள் சந்திப்பில், ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம், முழு பலனையும் தரவல்லது ஹம் நமச்சிவாயா என்பது அதுக்குன்னு உண்டான சில மந்திரங்கள் உள்ளன. அப்படிதான் சொல்ல வேண்டும். ஆனால் ஓம் நமச்சிவாயா என்பது அனைவரும் சொல்லலாம் என்று தெரிவித்தார்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...