ஆலாந்துறை வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறையில் உள்ள பழமை வாய்ந்த வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேக வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆலாந்துறை பகுதியில் உள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமையான வேட்டைக்காரன் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று மிக விமரிசையாக நடைபெற்றது.
ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய வேதங்களை உள்ளடக்கிய வேதமான தேவ வேத முறைப்படி இந்த கும்பாபிஷேக விழாவானது கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.
இதனையடுத்து மங்கள இசையுடன் யாகசாலை மூர்த்தங்கால் நடுதல், கணபதி ஹோமம், தீபாவளனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து புனித தீர்த்தம், புனித மண் எடுத்தல் முளைப்பாரி அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் மேளதாளத்துடன் நடைபெற்றது.
இதனையடுத்து கடந்த 2 நாட்களாக பல்வேறு விதமான பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று காலை சுமார் 9 மணி அளவில் கும்பாபிஷேகம் நிகழ்வானது ஸ்தபதி சுரேஷ் சாஸ்திரி தலைமையில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி அன்பரசன் ஆகியோர் தலைமையில் கடந்த நான்கு நாட்களாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.