கோவை ஆலாந்துறை வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேக விழா - ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்!

ஆலாந்துறை வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறையில் உள்ள பழமை வாய்ந்த வேட்டைக்கார சாமி கோவில் கும்பாபிஷேக வெகு விமரிசையாக நடைபெற்றது.



ஆலாந்துறை பகுதியில் உள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமையான வேட்டைக்காரன் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.



இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று மிக விமரிசையாக நடைபெற்றது.

ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய வேதங்களை உள்ளடக்கிய வேதமான தேவ வேத முறைப்படி இந்த கும்பாபிஷேக விழாவானது கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.

இதனையடுத்து மங்கள இசையுடன் யாகசாலை மூர்த்தங்கால் நடுதல், கணபதி ஹோமம், தீபாவளனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து புனித தீர்த்தம், புனித மண் எடுத்தல் முளைப்பாரி அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் மேளதாளத்துடன் நடைபெற்றது.



இதனையடுத்து கடந்த 2 நாட்களாக பல்வேறு விதமான பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று காலை சுமார் 9 மணி அளவில் கும்பாபிஷேகம் நிகழ்வானது ஸ்தபதி சுரேஷ் சாஸ்திரி தலைமையில் நடைபெற்றது.



இதனை தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் ஆலாந்துறை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி அன்பரசன் ஆகியோர் தலைமையில் கடந்த நான்கு நாட்களாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...