கோவை மதுக்கரையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் - கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு ரோந்து தனிப்படை காவல்துறையினர் சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து சோதனையிட்டபோது, அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

பின்னர் இருவரிடமும் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது22), என்பதும், தற்போது காந்திபுரத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் படித்து வந்ததும், மற்றொரு இளைஞர் சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த பூவேந்தன் (வயது21), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.



இருவரும் ரயில் மூலம் ஆந்திரா மாநிலத்துக்கு சென்று 10 கிலோ கஞ்சா வாங்கி வந்து, அதில் 4 கிலோ கஞ்சாவை விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படையினர, அவர்களிடமிருந்த 6 கிலோ கஞ்சாவைவும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...