கோவை மதுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு ரோந்து தனிப்படை காவல்துறையினர் சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து சோதனையிட்டபோது, அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
பின்னர் இருவரிடமும் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது22), என்பதும், தற்போது காந்திபுரத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் படித்து வந்ததும், மற்றொரு இளைஞர் சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த பூவேந்தன் (வயது21), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

இருவரும் ரயில் மூலம் ஆந்திரா மாநிலத்துக்கு சென்று 10 கிலோ கஞ்சா வாங்கி வந்து, அதில் 4 கிலோ கஞ்சாவை விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படையினர, அவர்களிடமிருந்த 6 கிலோ கஞ்சாவைவும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவரிடமும் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது22), என்பதும், தற்போது காந்திபுரத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் படித்து வந்ததும், மற்றொரு இளைஞர் சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த பூவேந்தன் (வயது21), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
இருவரும் ரயில் மூலம் ஆந்திரா மாநிலத்துக்கு சென்று 10 கிலோ கஞ்சா வாங்கி வந்து, அதில் 4 கிலோ கஞ்சாவை விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படையினர, அவர்களிடமிருந்த 6 கிலோ கஞ்சாவைவும் பறிமுதல் செய்தனர்.