உடுமலை அருகே தனியார் பள்ளியில் விளையாட்டு விழா - மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய டி.எஸ்.பி!

உடுமலை என்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உடுமலை டிஎஸ்பி தேன்மொழிவேல், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டிஎஸ்பி தேன்மொழிவேல் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

உடுமலையில் செயல்பட்டு வரும் என்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடத்தப்பட்டது. என்.வி., கல்விக் குழும தலைவர் வெங்கட் ராமன், செயலாளர் ரேவதி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மாணவ மாணவவிகள் இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேபோல, கடந்த 10, 11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், குடிமங்கலம் காவல் ஆய்வாளர் ரோஸ்லின், பள்ளி முதல்வர் அன்னபூரணி, உடற்கல்வி ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...