உடுமலை அருகே தனியார் பள்ளியில் விளையாட்டு விழா - மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய டி.எஸ்.பி!

உடுமலை என்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உடுமலை டிஎஸ்பி தேன்மொழிவேல், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டிஎஸ்பி தேன்மொழிவேல் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

உடுமலையில் செயல்பட்டு வரும் என்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடத்தப்பட்டது. என்.வி., கல்விக் குழும தலைவர் வெங்கட் ராமன், செயலாளர் ரேவதி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மாணவ மாணவவிகள் இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேபோல, கடந்த 10, 11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், குடிமங்கலம் காவல் ஆய்வாளர் ரோஸ்லின், பள்ளி முதல்வர் அன்னபூரணி, உடற்கல்வி ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...