பல்லடம் விவசாயி வீட்டில் திருட முயன்ற முகமூடி திருடன் - சிசிடிவி காட்சி வெளியீடு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் விவசாயி வீட்டில் முகமூடி அணிந்த நபர் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் விவசாயத் தோட்டம் ஒன்றில் முகமூடி அணிந்து உடல் முழுதும் போர்வையால் போர்த்திய நபர் அங்கு திருட முயற்சித்துள்ளார்.



இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், முகமூடி அணிந்தபடி திருடர்கள் கேமராவை துண்டித்துவிட்டு வீடுகளை நோட்டமிடுவது பதிவாகியுள்ளது.

ராயர்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரது விவசாய தோட்டத்தில் கடந்த 31.1. 2023 அன்று நள்ளிரவில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முகமூடி திருடர்கள் நடமாட்டத்தால் ராயர்பாளையம் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...