'முதுமலையில் வனக்குற்றங்களை எப்படி தடுக்கலாம்..?' - 3 மாநில வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை!

நீலகிரி மாவட்டம் முதுமலையில் வன குற்றங்களை தடுப்பது குறித்து தமிழ்நாடு, கேரளா உட்பட 3 மாநில வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கேரளா மாநிலம் முத்தங்கா வன சரணாலயம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என 3 புலிகள் காப்பகங்கள் உள்ளன.



இந்த வனப்பகுதிகளில் வன குற்றங்களை தடுப்பதில் மூன்று மாநில வனத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வன மேலாண்மை பயிற்சி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதுமலை புலிகள் காப்பக கலை இயக்குனர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.



அதில், பந்திப்பூர் புலிகள் காப்பக கள இயக்குனர் ரமேஷ், கேரளா வனத்துறை அதிகாரி நரேந்திர பாபு, முத்தங்கா வன பாதுகாவலர் ஆசிப், முதுமலை துணை இயக்குனர் வித்யா, சத்தியமங்கலம் துணை இயக்குனர் கிருபா சங்கர் தேவேந்திர குமார் மீனா ஆகியோரும் அந்தந்த புலிகள் காப்பக வன சரகர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இந்தக் கூட்டத்தில் வனப்பாதுகாப்பு மற்றும் தீத்தடுப்பு மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வனக்குற்றங்கள் தடுப்பதிலும் வன குற்றவாளிகளை பிடிப்பதிலும் தகவல் பரிமாற்றம் செய்வதிலும் அவசரகால சூழ்நிலைகளில் மாநில எல்லைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

குறிப்பாக நக்சல் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...