'முதுமலையில் வனக்குற்றங்களை எப்படி தடுக்கலாம்..?' - 3 மாநில வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை!

நீலகிரி மாவட்டம் முதுமலையில் வன குற்றங்களை தடுப்பது குறித்து தமிழ்நாடு, கேரளா உட்பட 3 மாநில வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கேரளா மாநிலம் முத்தங்கா வன சரணாலயம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என 3 புலிகள் காப்பகங்கள் உள்ளன.



இந்த வனப்பகுதிகளில் வன குற்றங்களை தடுப்பதில் மூன்று மாநில வனத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வன மேலாண்மை பயிற்சி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதுமலை புலிகள் காப்பக கலை இயக்குனர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.



அதில், பந்திப்பூர் புலிகள் காப்பக கள இயக்குனர் ரமேஷ், கேரளா வனத்துறை அதிகாரி நரேந்திர பாபு, முத்தங்கா வன பாதுகாவலர் ஆசிப், முதுமலை துணை இயக்குனர் வித்யா, சத்தியமங்கலம் துணை இயக்குனர் கிருபா சங்கர் தேவேந்திர குமார் மீனா ஆகியோரும் அந்தந்த புலிகள் காப்பக வன சரகர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இந்தக் கூட்டத்தில் வனப்பாதுகாப்பு மற்றும் தீத்தடுப்பு மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வனக்குற்றங்கள் தடுப்பதிலும் வன குற்றவாளிகளை பிடிப்பதிலும் தகவல் பரிமாற்றம் செய்வதிலும் அவசரகால சூழ்நிலைகளில் மாநில எல்லைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

குறிப்பாக நக்சல் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...