தாராபுரம் அருகே பைக்கில் இருந்து தடுமாறி விழுந்ததில் பெண் பலி

புதுக்கோட்டையிலிருந்து குண்டடம் செல்ல பைக்கில் குடும்பத்துடன் வந்த உணவக உரிமையாளர் மனைவி விபத்தில் சிக்கி உயிரிழப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பைக்கில் சென்ற போது வேகத்தடையில் ஏறி இறங்கிய போது தடுமாறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒய்யான் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்-திவ்யா தம்பதி. இவரது மகன் சிவபாலன்(8), மகள் சிவன்யஸ்ரீ(6), ஆகியோருடன் குண்டடம் அடுத்த மேட்டுக் கடையைப் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் விஸ்வநாதன் அப்பகுதியில் சாலையோர தள்ளுவண்டி உணவகம் கடை நடத்தி வருகிறார். இவர் பொங்கலுக்காக குடும்பத்துடன் பைக்கில் புதுக்கோட்டைக்கு சென்று விட்டு குண்டடம் செல்ல குடும்பத்துடன் தாராபுரம் வழியாகச் சென்று கொண்டிருந்தார்.

வரப்பாளையம் அருகே சாலையில் உள்ள வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதால் பின்னால் அமர்ந்திருந்த மனைவி திவ்யா கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே திவ்யா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...