கோவையில் வங்கி ஊழியர் வீட்டில் 8 சவரன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை பேரூர் அருகே வங்கி ஊழியர் அர்ஜுன் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் அருகே வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் அர்ஜுன் (31). இவர் சிங்கப்பூரில் உள்ள வங்கியில் வேலை செய்து வருகிறார். பாலாஜி நகரில் உள்ள வீட்டில் அர்ஜுன் மனைவி மற்றும் தாய் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு, சேலத்தில் உள்ள அர்ஜுனின் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனிடையே இருவரும் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...