கோவையில் வங்கி ஊழியர் வீட்டில் 8 சவரன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை பேரூர் அருகே வங்கி ஊழியர் அர்ஜுன் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் அருகே வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் அர்ஜுன் (31). இவர் சிங்கப்பூரில் உள்ள வங்கியில் வேலை செய்து வருகிறார். பாலாஜி நகரில் உள்ள வீட்டில் அர்ஜுன் மனைவி மற்றும் தாய் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு, சேலத்தில் உள்ள அர்ஜுனின் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனிடையே இருவரும் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...