கோவையில் வங்கி ஊழியர் வீட்டில் 8 சவரன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை பேரூர் அருகே வங்கி ஊழியர் அர்ஜுன் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் அருகே வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் அர்ஜுன் (31). இவர் சிங்கப்பூரில் உள்ள வங்கியில் வேலை செய்து வருகிறார். பாலாஜி நகரில் உள்ள வீட்டில் அர்ஜுன் மனைவி மற்றும் தாய் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு, சேலத்தில் உள்ள அர்ஜுனின் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனிடையே இருவரும் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...