பல்லடத்தில் விபத்தில் போக்குவரத்து காவலர் பலி - சொந்த ஊருக்கு சென்ற சடலம்!

பல்லடத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து காவலர் சடலத்துக்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் இறுதி மரியாதை செய்து காவலரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு.



திருப்பூர்: பல்லடத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து பிரிவு காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் இறுதி மரியாதை செய்தார்.

விருதுநகர் மாவட்ட சேது நாராயண புரத்தைச் சேர்ந்தவர் ராதா. இவருக்கு ராஜ ராதன்யா என்ற மனைவியும், சபரி வாசன் என்ற மகனும் அவரது சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார்.

இன்று காலை 7 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் பல்லடம் நான்கு முனை சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்ற போது பொங்கலூர் நோக்கிச் சென்ற டாட்டா ஏசி வாகனம் காவலர் ராதாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்ததால் பல்லடம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காகக் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே காவலர் ராதா உயிரிழந்தார். உடற்கூறு ஆய்விற்காக அவரது உடல் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.



சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் ராதாவின் உடலுக்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்சாய் மற்றும் காவல்துறையினர் பல்லடம் மருத்துவமனைக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

காவலர் ராதாவின் குடும்பத்தாருக்குக் காவல் கண்காணிப்பாளர் ஆறுதல் தெரிவித்து,பணியின்போது காவலர் ராதா உயிரிழந்ததால் தமிழக அரசு வழங்கும் ஈம சடங்கு நிதி 50,000 ரூபாய் தொகையை ராதாவின் குடும்பத்தாரிடம் மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கினார்.

இறுதி மரியாதை செலுத்திய பின்பு காவலர் ராதாவின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது சொந்த ஊரான விருதுநகருக்குக் கொண்டு செல்லப்பட்டது. காவலர் ராதாவின் உடலைக் கண்டு அவரது குடும்பத்தார் கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைத்து காவலர்களையும் பொது மக்களையும் கண்கலங்க வைத்தது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...