பல்லடத்தில் விபத்தில் போக்குவரத்து காவலர் பலி - சொந்த ஊருக்கு சென்ற சடலம்!

பல்லடத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து காவலர் சடலத்துக்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் இறுதி மரியாதை செய்து காவலரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு.



திருப்பூர்: பல்லடத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து பிரிவு காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் இறுதி மரியாதை செய்தார்.

விருதுநகர் மாவட்ட சேது நாராயண புரத்தைச் சேர்ந்தவர் ராதா. இவருக்கு ராஜ ராதன்யா என்ற மனைவியும், சபரி வாசன் என்ற மகனும் அவரது சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார்.

இன்று காலை 7 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் பல்லடம் நான்கு முனை சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்ற போது பொங்கலூர் நோக்கிச் சென்ற டாட்டா ஏசி வாகனம் காவலர் ராதாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்ததால் பல்லடம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காகக் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே காவலர் ராதா உயிரிழந்தார். உடற்கூறு ஆய்விற்காக அவரது உடல் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.



சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் ராதாவின் உடலுக்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்சாய் மற்றும் காவல்துறையினர் பல்லடம் மருத்துவமனைக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

காவலர் ராதாவின் குடும்பத்தாருக்குக் காவல் கண்காணிப்பாளர் ஆறுதல் தெரிவித்து,பணியின்போது காவலர் ராதா உயிரிழந்ததால் தமிழக அரசு வழங்கும் ஈம சடங்கு நிதி 50,000 ரூபாய் தொகையை ராதாவின் குடும்பத்தாரிடம் மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கினார்.

இறுதி மரியாதை செலுத்திய பின்பு காவலர் ராதாவின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது சொந்த ஊரான விருதுநகருக்குக் கொண்டு செல்லப்பட்டது. காவலர் ராதாவின் உடலைக் கண்டு அவரது குடும்பத்தார் கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைத்து காவலர்களையும் பொது மக்களையும் கண்கலங்க வைத்தது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...