கோவையில் பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயின் பறிப்பு

கோவை வைசியால் வீதியில் கோவிலுக்குச் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டு செயினை பறித்துச் சென்ற 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு.


கோவை: கோவையில் பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் ஓணாம்பாளையத்தை சேர்ந்தவர் பாக்கியவதி (63). இவர் நேற்று மாலை டவுன்ஹாலுக்கு பேருந்தில் வந்து கோவிலுக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றார்.

அப்போது வைசியால் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது, பாக்கியவதியிடம் இரண்டு பெண்கள் வந்து உக்கடம் செல்லும் பேருந்து எங்கே வரும் என கேட்டு விசாரித்துள்ளனர்.

அப்போது திடீரென சுமார் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் வந்து பாக்கியவதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு 4 பேரும் தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சியடைந்த அவர் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பெண்கள் உட்பட நான்கு மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...