கோவை வைசியால் வீதியில் கோவிலுக்குச் சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டு செயினை பறித்துச் சென்ற 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு.
கோவை: கோவையில் பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் ஓணாம்பாளையத்தை சேர்ந்தவர் பாக்கியவதி (63). இவர் நேற்று மாலை டவுன்ஹாலுக்கு பேருந்தில் வந்து கோவிலுக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றார்.
அப்போது வைசியால் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது, பாக்கியவதியிடம் இரண்டு பெண்கள் வந்து உக்கடம் செல்லும் பேருந்து எங்கே வரும் என கேட்டு விசாரித்துள்ளனர்.
அப்போது திடீரென சுமார் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் வந்து பாக்கியவதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு 4 பேரும் தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த அவர் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பெண்கள் உட்பட நான்கு மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் ஓணாம்பாளையத்தை சேர்ந்தவர் பாக்கியவதி (63). இவர் நேற்று மாலை டவுன்ஹாலுக்கு பேருந்தில் வந்து கோவிலுக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றார்.
அப்போது வைசியால் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது, பாக்கியவதியிடம் இரண்டு பெண்கள் வந்து உக்கடம் செல்லும் பேருந்து எங்கே வரும் என கேட்டு விசாரித்துள்ளனர்.
அப்போது திடீரென சுமார் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் வந்து பாக்கியவதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு 4 பேரும் தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த அவர் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பெண்கள் உட்பட நான்கு மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.