மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க நடவடிக்கை!

மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் வாகனங்களால் வனவிலங்குகள் விபத்தில் உயிரிழப்பதை தவிர்க்க 5 இடங்களில் வனத்துறையினர் வேகத்தடை அமைப்பு.



கோவை: மேட்டுப்பாளையம் - உதகை வனப்பகுதி சாலையில் வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உலக புகழ் பெற்ற சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தினை கடந்து இரண்டு வனச்சாலைகளின் வழியே பயணித்து தான் நீலகிரி மாவட்டம் செல்லமுடியும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை மற்றும் குன்னூர் சாலை ஆகிய இரண்டு வன சாலைகள் உள்ள நிலையில் இந்த சாலைகளில் அடிக்கடி வன உயிரினங்களான காட்டுயானை, மான், சிறுத்தை, காட்டு எருமை, குரங்கு உள்ளிட்ட பல வன சாலைகளை கடந்து வனப்பகுதிக்கு செல்ல முடியும்.

அப்படி சாலையை கடக்கும் போது வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகளவில் நடக்கிறது.



குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் நடப்பதால் வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைக்கவும், வனவிலங்குகளின் உயிரிழப்பை தடுக்கவும், மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் 5 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் ஓடந்துரை பகுதியில் இருந்து தூரிப்பாலம் வரை சுமார் 5 இடங்களில் வேகத்தடைகளை அமைந்துள்ள வனத்துறையினர் மேற்கொண்டு வனச்சாலையில் அதிவேகமாக வந்து வன உயிரினங்களின் மீது விபத்தை ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...